காதல் (திங்)கள் (குரல் பதிவு)
9:36 AM | Author: நிம்முவாகிய நான்

நீ நினைக்கிறேன்.

நான் பேசுகிறாய்.

நமக்குள் காதல் வராமல்

என்ன செய்யும்?

*

பூக்களற்ற தீவுகளுக்கு

மணம்வீசப் பயணிக்கிறது.

உன் கூந்தலிலிருந்து

பிரிந்த இழையொன்று.

*

நேரில் கோபித்துக்கொண்டு

கனவில் வந்து கொஞ்சும்

மக்கு நீ!

*

குடையின்றி நீ வருகையில்

வெயிலுக்கும் மழைக்கும் சண்டை!

*

நீ நிலாச்சோறுண்ணும்

பௌர்ணமி இரவுகளில்

காதல் கள்ளுண்ணும்

நிலா!

|
This entry was posted on 9:36 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: