நீ பறித்து சூட பூத்திருக்கிறது என்னுள் காதல்! |
* குடை விட்டெறி! உன்னில் |
* காய்வதேயில்லை! நீ தந்த |
* காதுகளுக்கு உன் பேச்சிசை! கண்களுக்கு உன் பேரழகு! நாசிக்கு உன் சுகந்தம்! தேகத்திற்கு தொடுகை! என்ன பாவம் செய்தது உதடுகள் மட்டும்; வா!முத்தமிட்டுப் போ! |
* நான் ஒரு பக்கம் உன் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் ஒரு பக்கம்! சமனாகி விடுகிறது |
எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!
*
மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!
*
பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!
*
முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!
*
நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!
*
உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?
*
நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!