இல்லாத பொழுதுகள்
8:53 AM | Author: நிம்முவாகிய நான்

நீ இல்லாத
பொழுதுகளும்
நன்றாகத்தான்
இருக்கின்றன
இப்போதுதான்
உன்னைபற்றி
அதிகம் நினைக்கிறேன்



நீ ஓடிப்போகலாமா
எனக்கேட்டதும் நான்
தயாராவதற்குள்
என்னைவிட்டு விட்டு
ஓடிப்போனால் எப்படி ?




உன்னை காதலித்ததற்கு
பேசாமல் ஒரு கழுதையை
காதலித்திருக்கலாம் என
கூறுகிறாய்
நானும் உன் நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும்
கழுதைதான் !




நான் தாடி வைத்தால்
சகிக்காது என நீதானே
கூறியிருக்கிறாய்
அதற்காகவாவது
என்னிடம் பேசிவிடேண்டி !




பேசிக்கொண்டாவது
இருந்திருக்கலாம்
பேசிக்கொடுத்த
தொல்லையைவிட
உன் நினைவுகளின்
தொல்லை
அதிகமாக
இருக்கிறது.




இனி உன்னிடம்
பேசப்போவதில்லை
என
கூறிவிட்டு நீ மட்டும்
சென்றுவிட்டால் எப்படி
கூடவே உன் நினைவுகளையும்
கூட்டிக்கொண்டு போய்விடு
அவைகளின் அழிச்சாட்டியம்
தாங்கமுடியவில்லை !



ஏன் என்னிடம் பொய்
சொன்னாய் எனக் கேட்டு
சண்டை போடுகிறாய்
நீ அழகாய் இருப்பதாய்
கூடத்தான் சொன்னேன்
அப்போது மட்டும்
ரசித்தாயே !




நிறைய நேரம் கிடைக்கிறது
இப்போதெல்லாம்
நம் நினைவுகளை
அசை போடுவதற்கு
ஊடல் வாழ்க !




தொலைக்க நினைத்தாலும்
என்னுடனே
ஒட்டிகொண்டிருக்கிறன
உன் நினைவுகள்
ஈரமான
கடற்கரை மணலைப்போலே



முதல் சுவடிலேயே.....
8:36 AM | Author: நிம்முவாகிய நான்
விளையாட்டு
என்று தான் கருதினேன்

முதலில்.

முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.

உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.

துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.

நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.

மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.

கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.

இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.

சில நேரங்களில்
6:16 AM | Author: நிம்முவாகிய நான்
சில நேரங்களில்

எத்தனை முறை

கொத்தினாலும் தீராத
கனி தான் காதல்.
கோடி மீன்கள் குடித்ததனால்
குறைவு படுமா கடல் ?

சில நேரங்களில்
பனிக்குள் பொதிந்து வைத்த
நீராய்,
இன்னும் சில நேரம்
நீருக்குள் பிரித்து வைத்த காற்றாய்
காதல்.

அது,
கிழமைகளின் கீழ்
கிழிந்து போவதில்லை.

இதயக் கோபுரங்களை
வெள்ளை விமானங்கள்
விழுங்கிடுமா என்ன ?

நீ,
அம்மனைத் தரிசிக்கும்
ராகு கால ரகசியம் முடிந்தபின்
நான் உன்னை
தவமிருந்து தரிசிக்கிறேன்.

நீ தான்,
விரதமிருக்கிறேன்
விலகிப் போ என்று
அவ்வப்போது
உன் செவ்வாய் கதவுகளைச்
சாத்தியே வைக்கிறாய்.

கர்ப்பக்கிரகம் திறந்த பின்னும்
கடவுளை யாரோ
திரையிட்டு மறைப்பதாய்
தோன்றுகிறது எனக்கு.

நல்ல வேளை,
நீ
மௌன விரதம் இருப்பதில்லை.

பூக்களுக்குள் வாசனை ஊற்றி
வண்டின் நாசிகளை
வடமிட்டுக் கட்டி இறக்கினால்
வலிக்காதா என்ன ?
மனசுக்கு.

எந்த ஆடை எனக்கழகு?
என
ஓர் பிரபஞ்சக் கேள்வி கேட்கிறாய்.

எந்தச் செடி
எனக்கழகென்று
பூக்கள் கேட்பது நியாயமா ?

எந்தப் பூ
எனக்கழகென்று
வண்ணத்துப் பூச்சி வினவலாமா ?

தொட்டாச்சிணுங்கியின்
தோழி நீ,
அனிச்ச மலரின்
பெண் அவதாரம் நீ,
விடையில்லையேல் வாடிவிடுவாய்.

காதுகளால் கேட்பது
காதலில் சுவையில்லை
உன்
உதடுகளைக் கடன் கொடு
முத்தத்தின் உலை தரும்
வெப்பத்தால் விளக்குகிறேன்.


தபூ சங்கரின் நெஞ்ச வர்ணக் கிளி
8:15 AM | Author: நிம்முவாகிய நான்



உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்
காதல் கவிதை
8:14 AM | Author: நிம்முவாகிய நான்


மேல் இமைகளில் 
நீ
இருக்கிறாய்
கீழ் இமைகளில் 
நான் 
இருக்கிறேன்
இந்தக் கண்கள் 
தூங்கிவிட்டால் என்ன??


தூங்கவே விடாமல் 
கண்ணாமூச்சி விளையாடுகிறது 
உன் காதல்
சத்தம் மறைக்கும் ஆயுதம்
8:14 AM | Author: நிம்முவாகிய நான்

என் வளையல்களின் 

மாநாட்டில் 
அவன் 
கவன ஈர்ப்புத்தீர்மானம் 
ஒருமனதாய் 
இருமனதால் 
நிறைவேற்றப்பட்டது 
**
இனி உடைபடும் 
வளையல்களுக்காய் 
நீ வருந்தவேண்டாம் 
அவை இந்நேரம் 
மோட்ஷம் அடைந்திருக்கும் 
**
வளையல் 
ஏன்டா பிடிச்சிருக்கு?? 
உன் முத்தத்தின் 
சத்தம் மறைக்கும் 
ஆயுதம் என்பதாலா??
** 
என் உடையாத 
வளையல்களுக்கு 
முத்தம் தராதே 
உடைந்த 
வளையல்களின் 
சத்தம் தாங்கமுடியவில்லை
** 
உன்னிடமிருந்து 
உதிர்ந்து விழுந்த 
முத்தத்திற்கு 
மௌன அஞ்சலி 
செலுத்தின 
உடைந்த 
என் வளையல்கள்
** 
உன் மீது 
நான் கொண்ட 
காதலைப் போலவே 
கணக்கிலடங்காதவை 
நமக்காக உடைந்த 
என் வளையல்களும்
** 
'வலையல்' 
தப்புடா 
அது 
'வளையல்' 
ம்ஹீம் 
உன்னுடையது மட்டும் 
வளைந்திருப்பது அல்ல 
வலைவிரிப்பது.....
பைத்தியம் தானடா....
8:13 AM | Author: நிம்முவாகிய நான்


உன்னிடமிருந்து
எனக்கு வரும்
மெயில்களையும்
நான் அனுப்பும்
பதில்களையும்
சேர்த்து வைக்கும்
நான்....

என் பெயரைவிட
உன் பெயர்
அழைப்புக்கு
அன்னிச்சையாய் திரும்பும்
நான்....

ஆயிரம் சொந்தங்கள்
அருகிலிருந்தும்
என் சுக, துக்கங்களில்
உன் தோள்சாயத்துடிக்கும்
நான்....

நல்லக் கவிதைகள்
நான் தந்தாலும்
நீ சொல்லும் பொய்களை
கவிதை என்னும்
நான்....



தினம் நூறு
தந்தாலும்
சோகத்தின் விளிம்பில்
என்
நெற்றியின் மத்தியில்
தரும் அந்த
ஒரு முத்தத்தை மட்டுமே
சுகிக்க நினைக்கும் 
நான்....



நீ இழந்த
நாட்களை
நான் இறந்த
நாட்களென
உணரும்
நான்...


எல்லோரும் அருகிருக்க,
ஏதும் அறியாதவன்
போல்
நீயிருக்க,
மாற்றான்
மனைவியாகப் போகும்
நான்....


உன்
வார்த்தையில்
சொன்னால்
பைத்தியம் தானடா..!!
காதல் என்பது
12:19 AM | Author: நிம்முவாகிய நான்














உன்னிடம் மயங்குகிறேன்...
12:17 AM | Author: நிம்முவாகிய நான்



உன்னைப் பிடிக்கவே
இல்லை போடா என
சொல்கிறாய் என்னை
இறுக்கிப் பிடித்துக்கொண்டே...



எப்போது சண்டையிட்டாலும்
அழகாகத்தான் இருக்கிறாய்...
ஆனால் நீ எனக்குத்தான் என
சொல்லி சண்டையிடும் போது
மேலும் மேலும் அழகாக
இருக்கிறாய் செல்ல குரங்கே...



எனக்கு ஒரு சந்தேகம் செல்லம்
உன்னை விதம் விதமாக
கொஞ்சவேண்டும் என்றுதானே
என்னிடம் விதவிதமான
காரணங்களோடு
சண்டையிடுகிறாய்..?



நான் கெஞ்ச கெஞ்ச உனக்கு
அதன் மதிப்பு தெரியவில்லை..
இனி உன்னைக்
கெஞ்சப்போவதில்லை..
தூக்கிக் கொஞ்சப்போகிறேன்..
அப்போது தெரியும் பார்..



நம்மைப் பற்றி அவுக
பேசறாக இவுக பேசறாக
என நீ கோபமாக
சொல்லும்போது
எனக்கு கோபம் வராமல்
சிரிப்புதான் வருகிறது...
சரிடி செல்லம்...
"ஏன் இந்த மூக்கு உனக்கு
இப்படி சிவந்திருக்கு...?"
இப்பொழுது கன்னங்களும்
சிவக்க ஆரம்பிக்கின்றன....



எப்பொழுது கவிதை
எழுத போகிறாய்
என நீ ஒவ்வொரு முறையும்
கேட்கும் போதுதான்
உணர்கிறேன் கவிதையை
எழுதவேண்டும்
பேசவிடக்கூடாது என...



நானும் நீயும் பேசிக்கொள்ளாமல்
இருந்த போது
என்ன செய்தாய் கவிதை
எழுத எனக் கேட்டாய்
சொன்ன பதிலைக் கேட்டு
கோபமும் வெட்கமும்
கலந்து நீ சொன்ன
"போடா.. திருடா..." வை
ஞாபகம் இருக்கிறதாடி ?



அச்சச்சோ.... உன்னைப் போல
ஒரு பொய்காரனை நான்
பார்த்ததே இல்லை என
அழகாக சலித்துக்கொள்கிறாய்..
அப்படியெல்லாம் நான் பொய்
சொல்லிக்கொண்டே இருக்க
மாட்டேண்டி குட்டி...
சில சமயம் கவிதையும் எழுதுவேன்..



நீ யார்கிட்டே வேணும்னாலும்
பேசிக்கோ எனக்கு
ஒண்ணுமே இல்லை
என்றுதான் சொல்கின்றாய்
அழகான உன் கண்களுக்குத்தான்
அவ்வளவாக
பொய்பேசத்தெரிவதில்லை
உன் உதடுகள் போல...



"ஏங்க" என கூப்பிடும்போதும்
"ஏண்டா" என அழைக்கும்போதும்
"கோபமா" என கேட்கும்போதும்
"ப்ளீஸ் பேசேன்" என கெஞ்சும் போதும்
"என் செல்லம் இல்லை" என கொஞ்சும் போதும்
" வேணாண்டா " என திணறும்போதும்
உன்னிடம் மீண்டும் மீண்டும்
மயங்குகிறேன்...
தடம் எண் 143ல் கொஞ்சல் Express...
12:16 AM | Author: நிம்முவாகிய நான்



இரயிலில் செல்லும் போது
என்னை உன்னால் எதுவுமே
செய்ய முடியாதே என என்னிடம்
பழிப்பு காட்டுகின்றாயாடி...??
இப்படியெல்லாம் தேவை
இல்லாமல் என்னை
சீண்டிவிட்டு....
அப்புறம் என்னைக்
குற்றப்படுத்தாதே...


நீ என்னவோ
நல்ல பிள்ளைபோல்
கைகட்டி என் அருகில்
அமர்ந்து இருக்கிறாய்..
ஆனால் யாருக்குமே தெரியாமல்
உன் விரல்கள் போடும்
கும்மாளம் யாருக்கடா
தெரியும்
என்னைத்தவிர..??!!


உங்களுக்கு எல்லாம்
கோலம் போடவே வராது
என எத்தனை முறை
கேலிசெய்திருக்கிறாய்...
ம்ம்ம்... கொஞ்சம்
பக்கம் வந்து உட்காரேன் செல்லம்...
என் விரல்கள் போடும்
கோலம் காட்டுகிறேனடி...


இரவினில் நன்றாக தூங்கியபடியே
பயணம் செய்யலாம் என்று
சொல்லி என்னை ரயிலில் அழைத்து
வந்து இப்படியெல்லாம் காதுக்குள்
பேசினால் எப்படிடா என்னால்
தனியாகத் தூங்கமுடியும்...?!!


எல்லாருக்கும்
முன்பாக உன்னை
ரகசியமாய் சீண்டிவிட்டு
உன் முகம் படும்
பாடுகளை பார்க்க
பார்க்க எவ்வளவு
அழகாக இருக்கிறது
தெரியுமாடி..?


பார்ப்பவர்கள் எல்லாம்
நீ ஏதோ என்னிடம்
ரகசியம் பேசுவதாக
நினைத்துக்கொள்கிறார்கள்..
திருட்டுப்பயல் உன்னைப்
பற்றி எனக்குத் தெரியதா..?
ச்ச்சீய்ய்... போடா....


இப்படிக் கொஞ்சிக் கொஞ்சியே
இன்னும் என்னவெல்லாம்
கொள்ளையடிக்கப்
போகிறாயோ எனக் கேட்கிறாய்...
உன்னிடம் கொள்ளையடிக்க
என்னடி இருக்கிறது உன்
அழகான வெட்கங்களைத்தவிர....?


இனி இரயில் பயணங்களில்
எல்லாம் என் அருகில்
அமராதே... மற்றவர்கள்
முன்பு நான் உன் குறும்பு
விரல்களால் நெளியாமல்
இருக்க படும் பாடு
உனக்கென்னடா தெரியும்...


கையை வைத்துக்கொண்டு
சும்மா இருக்க முடியவில்லையா
என பொய்யான
கோபத்தோடு கேட்கிறாய்..
உன்னை வைத்துக்கொண்டுதான்
சும்மா இருக்க
முடியவில்லை போடி...


இரயில் எல்லாம் இனி
உன்னுடன் பயணம்
செய்யவே மாட்டேன்
ரயில் பெட்டிகளைவிட
உன்னுடைய ஆட்டம்
அதிகமாக இருக்கிறது போடா...


முகம்முழுதும்
வெட்கங்களை பூசிக்கொண்டு
இதழ் முழுதும்
சிணுங்கல்கள் வழிய
யாரும் அறியாமல்
ரயிலில் நீ
என் காதுக்குள் சொல்லும்
வார்த்தைக்கள்
படுத்தும் பாடுகள்
உனக்குத் தெரியுமாடி
கன்னுகுட்டி...?
நீயும் நானும் மற்றும் வெட்கங்களும்...
12:15 AM | Author: நிம்முவாகிய நான்



கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...


இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??


உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட 
வேண்டுமா என்ன..? 


அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??


'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...


அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??


உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?


இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?


எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?


அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?


இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..


கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..



இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?