மணல் ஓவியங்கள் –
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!

#

தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!

#

நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!

#

இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!

#

நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!

|
This entry was posted on 2:26 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: