பிறந்த வீடா? புகுந்த வீடா?
9:35 AM | Author: நிம்முவாகிய நான்

இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.

*

நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.

*

ஒரு
முத்தக்கவிதைகேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?

*

பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?

*

முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?

|
This entry was posted on 9:35 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: