இனி பகலில் முத்தமிடாதே.
நிழல்கள் வெட்கப்படுகின்றன.
*
நம் முத்தங்களைக் கண்டு
இதழ்களாய் மாறிட ஏங்கும்
விழிகள் நான்கும்.
*
ஒரு ‘முத்தக்கவிதை‘ கேட்டாய்.
தனித்தனியாகதான் கிடைக்கும்
பரவாயில்லையா?
*
பாதி முத்தங்களைப்
பார்வைகளே தந்துவிட்டால்
இதழ்கள் என்ன செய்யும்?
*
முத்தப்பெண்ணுக்கு
உன் இதழ்கள்
பிறந்த வீடா? புகுந்த வீடா?
0 comments: