நீ பறித்து சூட பூத்திருக்கிறது என்னுள் காதல்! |
* குடை விட்டெறி! உன்னில் |
* காய்வதேயில்லை! நீ தந்த |
* காதுகளுக்கு உன் பேச்சிசை! கண்களுக்கு உன் பேரழகு! நாசிக்கு உன் சுகந்தம்! தேகத்திற்கு தொடுகை! என்ன பாவம் செய்தது உதடுகள் மட்டும்; வா!முத்தமிட்டுப் போ! |
* நான் ஒரு பக்கம் உன் உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் ஒரு பக்கம்! சமனாகி விடுகிறது |
எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!
*
மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!
*
பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!
*
முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!
*
நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!
*
உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?
*
நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!
ஆதாம்
ஏவாள் சுவைத்த
பாவக்கனி
காதல்!
*
துளிர் துயிலும்
மழைத்துளி பருகவரும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய்
என்னிருதயம்
உனைத் தேடி
வரும் அந்நாளில்
காத்திரு காதலோடு!
*
கசப்பு மருந்தருந்திய
குழந்தையின் முகமாய்
இதயம்;
உன்னை காணா நாட்களில்!
*
ஒரு நாள்
மழையோடு;
மற்றொருநாள்
மலரோடு;
இன்னொரு நாள்
இசையோடு என்று
ஒவ்வொரு சந்திப்பின் பிறகும்
ஒவ்வொன்றோடு திரும்புகின்றேன்;
பொத்தி வைக்க இடமில்லாமல் போகும் நாளில்
மொத்தமாக கடத்திச் செல்வேன் உன்னை!
*
உலர்ந்து வெளிறி
உடையும் நிலையிலிருக்கிறது
ரோஜா இதழ்கள்;
பனி கூட உதிராமல்
பத்திரமாய் இருக்கிறது
அதை நீ கை சேர்த்த கணம்!
*
குளித்து வரும்
உன்னில் வழியும்
நீர்த்துளிகள் நினைவூட்டுகின்றன;
மழை தூரிகை
சன்னல் கண்ணாடியில்
வரையும் ஓவியங்களை!
*
தேநீரில்
கரைந்திட காத்திருக்கும்
சர்க்கரைக் கட்டியென
உன்னுள் கலந்திட
படைக்கப்பட்டவள் நான்!
*
உன்
வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
பத்திரப்படுத்துகிறேன்
என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்!
*
உன்னைப் போலவே
அழகாயிருக்கிறது
நம் காதலும்!
*
நீ உறைய – இதயம்
கொத்திக் கொத்தி
கூடு அமைக்கிறது
காதல் குருவி!
*
அதிகாலை எழுந்து
சோம்பல் முறிக்கிறாய்;
எங்கோ மெல்ல
மொட்டு வெடிக்கிறது
ஓர் தாமரை!
*
கோபமாய்
நீ முகம் திருப்பிடும்
கணத்தில்
சட்டென நிகழ்ந்தே விடுகிறது
என் வானில்
ஓர் சந்திர கிரகணம்!
*
பார்வையற்ற மனிதனின்
கைத்தடியாய்
நீ இல்லா என் வாழ்வில்
நின் நினைவுக்குறிப்புகள்!
*
எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லை
உன் இதழ்கள்
என் மேல் வரைந்த
ஈர ஓவியங்களை!
மணல் ஓவியங்கள் –
மண் மீது படியும்
உன் கால்தடங்கள்!
#
தள்ளி நின்றே
கும்பிடு!
இறங்கிவந்து கட்டிக் கொடுக்கச் சொல்லி
அடம்பிடிக்கப் போகிறான்
அய்யனார்!
#
நீ அமைதியாய்தான்
இருக்கிறாய்;
உன் அழகுதான்
புரிகிறது
ஆயிரம் அழிச்சாட்டம்!
#
இதழ் ஒற்றி எடுத்தாய்
கைக்குட்டையில்
முளைத்தது ரோஜா!
#
நாட்குறிப்பில் பூத்த
கவிதையை பறிக்க
உனை அழைத்தால் –
நீ வருகிறாய்
ஆயிரம் கவிதைகளை சுமந்தபடி!
உன் வெட்கத்தின்
மையால்
வரையப்படுகிறது
அந்தி!
*
உன் புன்னகைகளை
மதுக் கோப்பையில்
நிரப்பித் தந்தேன்
தள்ளாடியபடி இருக்கிறது
இதயம்!
*
காதல் மீனுக்கு
பொரி
நீ,நான்!!
*
விரலசைத்து
நீ பேசும்போது
காற்று
ஓர் வீணை!
*
உன்னோடு
நான் இருக்கையில்
உலகின் பரப்பளவு
சில சதுர அடிகள்!
*
நீ சிந்தும்
வெட்கத்தை
சேலையென
உடுத்திக் கொள்கின்றன
என் கவிதைகள்!
மெளனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?
*
நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்!
*
ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!
*
அடுத்த சந்திப்பிற்காக
காத்திருக்கிறோம்;
உனக்காக நானும்
நின் நிழலுக்காக
என் நிழலும்!
*
இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!
பிணைந்திருக்கும்
நம் கரங்களுக்குள்
கதகதப்பாய் காதல்!
*
உன் கன்னக்குழியில்
இருக்கிறது
என் ஆயுளின் சாவி!
*
வறண்ட உதட்டை
ஈரப்படுத்துகிறாய்!
அவசரமாய்
ஆயுத்தமாகின்றன
என் இதழ்கள் முத்ததிற்கு!
*
உன் வசவுகளை விட
துயரமானது
கோபமான மெளனம்!
*
நம் தனிமையில்
உன் துப்பட்டாவை
கலைக்கும் காற்றுக்கும்
எனக்கும் என்ன உறவென்றால்
என்ன நான் சொல்வது?!
*
காத்திருத்தல் சுகம்
உனக்காக
எனும்போது!
*
வாழ்க்கையை உருட்டுகையில்
எனக்கு விழுந்த
தாயம் நீ!
*
உன் பேரழகை
அழகாய் சொல்பவையே
கவிதைகள்!
நின்
அருகாமையில் வேகமாகவும்
தூரத்தில் மெதுவாகவும்
சுழல்வதுமாய் உலகம்;
உன்னால்
பைத்தியமாகிவிட்டது அதுவும்!
*
உன்னில் பாதியாய்
என்னில் மீதியாய்
நம்மில்
முழுதும் காதல்!
*
காதலிப்பதற்கு
நீ இருக்கிறாய்
என்ற காரணமே
போதுமாயிருக்கிறது
நான் தொடர்ந்து சுவாசிப்பதற்கு!
*
வெகுநாட்கள் கழித்து
சந்திக்கும் கணத்தில்
நம் விழி பொங்கும் கண்ணீரில்
கப்பல்விடக் காத்திருக்கிறது
காதல்!
*
உன்
கண்மையைக் கொடு;
மைப்போட்டு பார்க்கலாம்
உன்னில் தொலைந்த
என்னிதயத்தை!