Yahoo விடும் தூது !
11:35 PM | Author: நிம்முவாகிய நான்




இப்பொழுதெல்லாம்
அடிக்கடி எனக்கு கோவம்
வருகிறது
நீ ஆன்லைனில் இல்லாத
நேரங்களில்


2




நான் உனக்கு மெயில்
எழுத உக்காந்தாலே
ஏன்தான் இந்த கடிகாரம்
வேகமாக சுற்றுகிறதோ ?


3



பேசிப்பேசியே
களைத்துபோனது
நம் விரல்கள் !


4



நீ ஒருமுறை என்னிடம்
‘ சாட் ‘ செய்தாலே
நான் பல கவிதைகளை
திருடிவிடுகிறேன்


5



உன் கடிதம் இல்லாத
என் ‘இன்பாக்ஸை’
திறப்பதற்குபதில்
திறக்காமலே இருக்கலாம்

6



‘ ச்சீய் போடா !! ‘
எங்கிருந்து கற்றுகொண்டாய்
இந்த அழகான வார்த்தையை
எங்கே இன்னொருமுறை
சிணுங்கு ?!!






பெறாத முத்ததிற்காக
நீயும்
கொடுக்காத முத்ததிற்காக
நானும்
வெட்கப்படுகொண்டிருக்கிறோம்
மெசெஞ்சரில் !





சீக்கிரம் ஆன்லைனில்
வாயேண்டி !!
அவசரமாக உனக்கு
ஒரு முத்தம் தரவேண்டும் !!




யார் யாரோ வந்து
ஹாய் சொல்லிவிட்டு
சென்றபோதெல்லாம்
சும்மா இருந்த என்
மெசெஞ்சர்
நீ வந்தபோது மட்டும்
ஆனந்த கூத்தாடுகிறது



10


‘ என்னடா ரொம்ப உற்சாகமாய்டே?'
என கேட்கிற என் நண்பனிடம்
எப்படி சொல்வது
இப்பொழுதுதான்
நான் உன்னிடம் ‘சாட்’
பண்ணிவிட்டு வருகிறேன் என்று !



11


கண்டவளோட ‘சாட்’
பண்ணிட்டு இருக்கத்தான்
எப்பவுமே நீ ‘ஆன்லைனில்’
இருக்கிறாய் என ஏன்
என்னிடம் சண்டை போடுகிறாய் ?
நீ வரும்போது வரவேற்கத்தான்
நான் மெசெஞ்சர் மீது
விழிவைத்துக் காத்திருக்கிறேன்
நம்பித்தொலையேண்டி ..


12


கோபமாக என்னிடம்
சொல்கிறாய்
‘ எனக்கு வர்ற ஆத்திரத்திற்கு
உன்னை..’

‘ என்ன கட்டிப்பிடித்து
முத்தம் கொடுக்க வேண்டும்போல்
இருக்கிறதா ?? ‘

என கேட்டவுடனே
நீ அனுப்பிய
கோப ‘ ஐகான்’
வெட்க ‘ஐகானாக’
மாறுவது ரொம்ப
அழகுடி .


13

இப்படியெல்லாம் என்னிடம்
பேசினால் நான் உன்னை
நான் என் மெசெஞ்சரில்
இருந்து ‘கட்’ பண்ணிவிடுவேன்
என்கிறாய்
ஆனால் உன் கை என்னவோ
‘ டைப்’ செய்துகொண்டேதான்
இருக்கிறது .



14


ஹையோ ! இப்பொழுதெல்லாம்
உன்மீது ‘ஆன்லைனில்’
கூட என்னால்
கோபபட முடியவில்லையே
என்ன செய்வேன் ?

|
This entry was posted on 11:35 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: