எம்குலப்பெண்களுக்கு...
11:37 PM | Author: நிம்முவாகிய நான்


soorai



போதும் போதும்
என்றாலும்
விடாமல் என்
கற்பை சூறையாடுகிறது
இந்த மதிகெட்ட
ஆண்குலம்
தன் கண்களாலே


vilagum2



பேருந்தில்
நடைபாதையில்
சாலையில்
கோவிலில்
எங்கும் எப்போதும்
ஏதோ ஒரு ஆண்
ஏதாவது விலகுமா என
முறைத்துக்கொண்டே
இருக்கிறான்


pirasavam


கொஞ்சம் வழிகேட்டால்
போதும் பிரசவ அறைக்கு
அனுப்பும் வரை
ஓய்வதில்லை
உன் குலம் !!


thaali4


தாலி
மெட்டி
குங்குமம்
எப்படியெல்லாமோ
வேலி போட்டு
அனுப்புகிறாய்
உன் சக ஆண்குலத்தின்
மீது அப்படியொரு
நம்பிக்கையா ?? !!



maathavi5


தாயாக
தாசியாக
சேயாக
தோழியாக
தாதியாக
உனக்காக
எத்தனை அவதாரம்
எடுத்தாலும்
நீ மாதவிகளையே
போற்றுகிறாயே
ஏன் ?


parathai


ஒன்றுக்கு மேல்
கட்டிக்கொண்டால்
அதிர்ஷ்டகாரன் என
பெருமைப்படுகிறது
உன் குலம்
அதையே நான் செய்தால்
பரத்தை
எனத் தூற்றுகிறது
உன்குலம்



saram7


என் உரிமைபூக்களைச்
சரமாக்கி
என் தலையிலேயே
சூடிவிடுவதற்கு
உன் இனத்திற்கு
உள்ள அறிவே தனி !!

|
This entry was posted on 11:37 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: