கொஞ்சம் கொஞ்சேன்....
12:11 AM | Author: நிம்முவாகிய நான்




கொஞ்சம் பேசிவிடேன்
என்னிடம்..
கோபத்திலும் நீ அழகாக
இருக்கிறாய் என்ற பொய்யை
எத்தனைமுறைதான்
சொல்வது
செல்லக் குரங்கே..??




நான் நல்லா இருக்கிறேனா
இல்லை என் சுரிதார் நல்லா இருக்கா
எனக் கேட்கிறாய்..
இரண்டுபேருமே
சேர்ந்திருந்தாலும் அழகுதான்
சேராமலிருந்தாலும் அழகுதான்
எனச் சொன்னால் ஏண்டி
அடிக்க வருகிறாய் ...??




என்னிடம் உனக்கு
என்ன பிடிக்கும் என
நீ தானே கேட்டாய்...??
சொல்லவா இல்லைக்
காட்டவா எனச்
சொன்னதற்குப் போய்
இப்படிக் கிள்ளுகிறாயே
ராட்சசி...




ஹய்யோ உன்னைப் போய்
எந்த லூசுடா காதலிப்பா...
எனக் கேட்கிறாய்
நீ என்னவோ
பெரிய அறிவாளி
என நினைத்துக்கொண்டு...




ஒரேயொரு முத்தம்
கொடுடி என
இனியும் உன்னைக்
கெஞ்சிக்கொண்டிருக்கமாட்டேன்..
தேவையில்லாமல் என்னைத்
திருடனாக்காதே...




உன்னைக் கெஞ்சக் கெஞ்ச
ரொம்பத்தான்
மிஞ்சுகிறாய் நீ..
என்னடா
நினைத்துக்கொண்டிருக்கிறாய்
எனக்கோபமாகக் கேட்கிறாய்
உன்னைத்தான் என்ற
உண்மை உணராமல்...





என்னை விட்டுத்தொலையேன்
என நீ கோபமாகச்
சொல்லிச்சென்றால் எப்படி..?
விட்டுத்தான் தொலைத்துவிட்டேன்
என்னை உன்னிடம்...





உன்னைக்
காதலித்ததால்தான்
நான்கவிதை
எழுதிக்கொண்டிருப்பதாய்
என எல்லோரும்
சொல்கிறார்கள்...
நான் காதலிப்பதே
ஒரு கவிதையைதான்
என உணராத
அற்ப மானிடர்...





என்னைவிட உன்னை
இப்படி இறுக்கிப்
பிடித்திருக்கும் உன்
உடைமீது கூட
இப்பொழுதெல்லாம்
பொறாமை வருகிறது
தெரியுமா...?




நீ ஒன்றும் பெரிய
அழகியெல்லாம் இல்லை
ஏதோ நான் காதலிப்பதால்
பேரழகியாகத்தெரிகிறாய்
என உண்மையை சொன்னால்
ஏண்டி இப்படி முறைக்கிறாய்..?




உன்னை வர்ணித்து
எல்லாம் கவிதை
எழுதமுடியாதடி....
நாம் மட்டுமே
ரசிக்கும் கவிதை நீ...

|
This entry was posted on 12:11 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: