பொய்மையும் பெண்மையிடத்து
11:30 PM | Author: நிம்முவாகிய நான்


பொய் சொல்ல மாட்டேன்


இனிமே என் கிட்டே
பொய் சொன்னா
அவ்வளவுதான்
என கடுமையாக
முகத்தை வைத்துக்கொண்டு
சொல்கிறாய்
‘சாரிம்மா இனிமே
நான் பொய்யே
சொல்ல மாட்டேன்’
என நான் மீண்டும் ஒரு
பொய் சொன்னால்தான்
நீ சிரிக்கிறாய்!





போடா பொறுக்கி
<
ஏதோ சொல்லிவிட்டதற்காக
என் முகத்தில் இனி
முழிக்காதே என
சொல்லிவிட்டாய்.
சரி இனி தினமும்
காலையில் கண்ணை
மூடிக்கொண்டே உனக்கு
முத்தம் தர வேண்டியதுதான் போல
என நான் சொன்னதும்
போடா பொறுக்கி என
செல்லமாக திட்டிவிட்டு
வேகமாக வந்து ஒட்டிக்கொள்கிறாய்
அழகான வெட்கத்துடன் !





Image Hosted by ImageShack.us

என்னைக்காவது
உண்மையை சொல்லி
இருக்கியா என
நீ கோபமாக
கேட்டபொழுது
நான் பரிதாபமாக முகத்தை
வைத்துக்கொண்டு
கோபதிலயும் நீ
அழகாத்தாண்டி இருக்கே
எனக்கூறியதும்
அதுவரை
உன் முகத்தில் நிலைகொண்டிருந்த
கோபப்புயல்
வெட்கப் புயலாக
மாறியது !





கோபமான அழகு

ஏன் அடிக்கடி
நான் கோபப்படுற மாதிரி
நடந்துக்குறே என
நீ கேட்டபொழுது
கோபமா நீ இருக்கும் போது
உன் உதடு துடிக்கிறதைப்
பார்க்க அழகா இருக்கு
அதான் என நான் பயந்தவாறே
கூறிய பொய்யைக் கேட்டு
திடீரென ஏற்பட்ட உன்
வெட்கத்தை மறைக்க
முயன்றது உண்மையாகவே
அழகாக இருந்ததடி !






ஐஸ் வைக்காதீங்க


இந்தப் புடவை
அழகா இருக்கா
என உனக்குப் பிடித்த
புடவையை காட்டி கேட்கிறாய்
அழகாத்தான் இருக்கு
ஆனா உன்னைவிட இல்லை
என நான் கூறியதைக்
கேட்டு ‘போதும் ரொம்ப
ஐஸ் வைக்காதீங்க’
என என் பொய்யை
ரசித்துக்கொண்டே
சொல்கிறாய்

|
This entry was posted on 11:30 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: