ஹேர்பின்னால் கூந்தலில்
பூக்குத்திக் கொள்கிறாய்
ஓரக்கண்ணால் என்னையும்
நீ குத்திக் கொல்கிறாய் !
நீ தலைவாரும் சீப்பிலிருந்த
கேசத்தை எடுத்து
புத்தகத்தில் வைத்தேன்
மயிலிறகு குட்டிபோடும் என்றால்
உன் மயிர் இறகு போடாதா ?
கொலைக் கருவிகளின் பட்டியலில்
நீ அணிந்திருக்கும்
கொலுசையும் சேர்த்துக்கொள்ளலாம் !
அரிசி புடைக்கும்
உன் அம்மாவுக்குத் தெரியுமா ?
மகள்
புருவ அசைவிலேயே இதயத்தைப்
புடைத்து எடுப்பாள் என்று...
உன் கூந்தல் சிலுவையில் அறையப்படும்
மல்லிகைப்பூக்கள்
மறுநாள் மறிப்பதில்லை
உயிர்த்தெழுகின்றன
பூஜைநேரம் ஆனால்
கோயில் மணி அடிக்கிறது
நீ வரும் நேரம் ஆனால்
என் இதயத்தில் பூஜை நடக்கிறது.
உன் கால்தடங்களைக் கண்டால்
அழித்துவிடுகிறேன்
தேவதையின் பாதச்சுவடுகள்
தெருவில் கிடப்பதா ?
துணி காயப்போட
நீ மாடிக்கு வருவது
தெருவில் போகும் என்னை
துவைக்கத்தானே..!
உனக்கே தெரியாமல் நான்
உன்னை காதலித்ததிலும்
நீ என்னை காதலிப்பதாக
நினைத்துக் கொள்வதிலும்
உள்ள சுகம்
அவன் அவனுக்கு மட்டும் தெரியும்.
காக்கை ஒருநாள் உன்மேல்
எச்சமிட்டு விட்டது
சிலைகளைப் பார்த்தால் காகங்கள்
இப்படித்தான் செய்துவிடுகின்றன !
0 comments: