தொலைந்த நினைவுகள்
11:04 PM | Author: நிம்முவாகிய நான்






ஏன் எனக்கிந்த சோதனை ?
நான் என்னிடமில்லை
என்பதை அறியவில்லையா ?

கண்டநாள் முதலாய் நான்
தொலைந்து போனது
உனக்கு தெரியவில்லையா ?

ஊண் மறந்து நாட்கள்
பலவானது
உணர்வில்லையே ! ஏன் ?

பிரிதொருநாள் சந்திப்போம்!
வாக்கு பொய்யானது ! ஏன் ?

உறக்கம் பிடிக்கவில்லை
நினைவு மறக்கவில்லை
சித்தம் எனக்கில்லை
வேதனை வடியவில்லை !
இரக்கம் இல்லையா ?

பிரியேன் எனக்கூறி
பிரிந்ததேன் ?
என நேசம் தெரியவில்லையா ?
பாசம் உணரவில்லையா ?
உயிர்கவர்ந்து சென்றதேன் ?

சிதையிலிட்டு எரிக்க
மனமில்லை
உன்பாதியை சிதையிலிட்டு
எரிக்க மனம்
ஒப்பவில்லை !

ஏச்சுகள் உனை எட்டவில்லையா ?
பேச்சுகளின் ஏளனம் தாங்கவில்லை
இமையறுத்து இன்னமும் காத்திருக்கிறேன் !
எப்பொழுதாவது நீ
எனை கடத்திச்செல்வாயென !
|
This entry was posted on 11:04 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: