நுங்கு தின்ன கதை
11:03 PM | Author: நிம்முவாகிய நான்




பேச்சி காதை :


ஐஸ்வண்டிகாரனிடம்
ஒருகுச்சி ஐஸ்வாங்கி
ரெண்டுபேரும் சுவச்சகதை
மறந்துட்டு தான்
போனதென்ன ?

நவாப்பழம் தின்னுபுட்டு
நாக்கு மேல நாக்கு வச்சு
கலர் பார்த்தகதையத்தான்
மறந்துட்டு தான்
போனதென்ன?

எளநுங்க தேடிப்போயி
பனங்காட்டு ஓடையிலே
நுங்குதின்ன சேதியதான்
மறந்துட்டு தான்
போனதென்ன?

கரும்பு காட்டுகுள்ள
கன்னிவக்க போலாமின்னு
நுனிக்கரும்ப ருசிச்சகதை
மறந்துட்டு தான்
போனதென்ன?

இடையத்தான் தொட்டுகிட்டு
சைக்கிள் ஓட்ட கத்துத்தந்தே
கீழே விழுகாம முழுகாம
ஆகிபுட்டேன் !


சீக்கிரமா நீ வந்தா
தாலிகட்டி கூட்டிடுபோ
இல்லையினா கோடித்துணி
வாங்கியாந்து தூக்கிட்டு போ !



அவன் காதை :


பிஸ்ஸாவ பார்த்தாலும்
பிசாசா உன் நெனப்பு
டின்பீரு குடிச்சாலும்
பொங்குது உன்
கதகதப்பு !


கவுனத்தான் போட்டுகிட்டு
பலபேரு போனாலும்
உன் கண்டாங்கி சேலை போல
இல்லயடி சின்ன சிறுக்கி !


பின்லேடன் போலநானும்
பதுங்கித்தான் போனாலும்
ஜார்ஜ்புஷ்ஷபோல
தொரத்துதடி உன் நெனப்பு !

சீமச்சரக்கடிக்க
பாருக்குதான் போனாலும்
நீ பாக்குறப்போ உள்ள ‘கிக்’கு
எதுலயுமே இல்லையடி !

ஜல்லிகட்டு காளைபோல
உன்நெனப்பு துள்ளுதடி
அடக்கத்தான் முடியாம
ஆஞ்சுபோயி நின்னுருக்கேன் !

பொங்கப் பானை போல
பொங்குதடி என் மனசு
சீத்த முள்ளுபோல
ஆகிபோச்சு என்படுக்கை !

சீவி முடிஞ்சுக்கோ
சீக்கிரமா நான் வாரேன்
கண்ணைத் தொடச்சுக்கோ
உன்னகொண்டு நான்போறேன் 
|
This entry was posted on 11:03 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: