மூன்றாம் பால் !
11:06 PM | Author: நிம்முவாகிய நான்



பூங்குழலி ஆரணங்கு
தேன்வடியும் பூவதரம்
தீஞ்சுவைக்கவில்லையடி
தெவிட்டாத
தேனமுதே !


நான் சுவைக்க
வந்தருகில்
இழுத்தணைத்து
வைத்துவிடு
நாணமென்ன
நீ மொழிவாய்
ஆதவனை
தூங்கச்சொல்வேன்

கொல்லும்
விழியிரண்டை
இழுத்தணைக்கும்
இமைகளென
நித்தம் தழுவிடுவேன்
மூழ்கி
முத்தமெடுப்பேன்
மூர்ச்சையாகும் வரை !

பேதை
உன் வாயில்
ஊறும்
கள்
போதை
நித்தம் குடித்திடுவேன்
சித்தம்
போகும்வரை!


நானணைத்தால்
நாணலாடை
நாற்பதடி
போய்விழுமே
நான் விலகும்
போதினிலே
மீண்டும் ஒட்டிக்
கொள்ளுவதேன் ?


வெட்கஆடை
நீயணிந்து வெப்பமாக
வந்து நின்றால்
வேலியோரம்
உள்ள ஆசை
வேங்கையாகப்
பாய்ந்திடுமே

களைந்திடுவேன்
இருஆடை
களையாத
கூந்தலாடை
கலைந்திடுமே
தினம் காலை
சொல்லிடுமே
நம் காதை


இன்னும் என்ன
நாணமுகில்
பொழிந்திடுவாய்
காதல்மழை
இரைதேட
தொடங்கிடுவோம்
இருவருமே
களைக்கும்வரை...
|
This entry was posted on 11:06 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: